என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் தற்கொலை"
புதுச்சேரி:
புதுவை வாணரப்பேட்டை உடையார் தோட்டம் ஏழை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயசீலன் (வயது 43). சுமை தூக்கும் தொழிலாளி.
இவருக்கு சுதா என்ற மனைவியும், ஜாஸ்மின் (22) என்ற மகளும், டேனியல் (14) என்ற மகனும் உள்ளனர். ஜாஸ்மின் பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார்.
இவருக்கு பெற்றோர் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதற்காக பல்வேறு இடங்களில் வரன்கள் தேடினர்.
தனக்கு திருமணம் செய்து வைப்பதை அறிந்த ஜாஸ்மின் தற்போது எனக்கு திருமணம் வேண்டாம் என கூறினார். ஆனால், பெற்றோர் வடலூரை சேர்ந்த ஹென்றி என்ற வாலிபருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
இதில், இருவீட்டு சம்மதத்துடன் கடந்த மாதம் 9-ந் தேதி பெண் வீட்டில் வைத்து நிச்சயதார்த்தம் நடந்தது. அதன் பிறகு மீண்டும் ஜாஸ்மின் தனக்கு திருமணம் வேண்டாம் என்றும், தான் மேலும் படிக்க வேண்டும் என கூறினார்.
ஆனால், பெற்றோர் அதை கண்டுகொள்ளாமல் திருமண ஏற்பாடுகள் செய்து வந்தனர். கடந்த 31-ந் தேதி ஜெயசீலன் வழக்கம் போல் வேலைக்கு சென்றார்.
மனைவி சுதா மகள் திருமணம் சம்பந்தமாக வெளியே சென்றார். ஜாஸ்மினும் அவரது தம்பி ஹென்றியும் வீட்டில் இருந்தனர்.
அப்போது ஜாஸ்மின் திடீரென அறை கதவை உள்பக்கமாக பூட்டி கொண்டார். பின்னர் அவர் மின் விசிறியில் சேலையால் தூக்குபோட்டு கொண்டார்.
இதை கண்ட அவரது தம்பி ஹென்றி கதவை தட்டினார். ஆனால், கதவு திறக்கப்படாததால் அவர் கூச்சலிட்டார்.
இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் கதவை உடைத்து ஜாஸ்மினை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு 9.30 மணியளவில் ஜாஸ்மின் சிகிச்சை பலன் இன்றி இறந்து போனார்.
இதுகுறித்து ஜெயசீலன் முதலியார்பேட்டை போலீ சில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பாபுஜி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜன், ஏட்டு செஞ்சிவேல் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரச்சலூர்:
அரச்சலூர் அடுத்த கஸ்தூரிபா கிராமம் காலனியைச் சேர்ந்தவர் மணி. இவரது மகள் சசிகலா (வயது21). இவர் பி.எஸ்.சி முடித்துவிட்டு தற்போது திருப்பூர் பனியன் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
இவரது பெற்றோர் கூலி வேலை பார்த்து வருகிறார்கள். ஒரே ஒரு தங்கை. பெயர் கார்த்திகா. பள்ளியில் படித்து வருகிறார்.
நேற்று சசிகலா வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். பெற்றோர் வேலைக்குச் சென்றுவிட்டனர். தங்கையும் பள்ளிக்கு சென்று விட்டார்.
மாலையில் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த தங்கை கார்த்திகா வீட்டின் கதவு தாழ்பாள் போட்டு இருப்பதை கண்டு கதவைத் திறக்கும்படி கூறினார்.
ஆனால் நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை. இதனால் அக்கம் பக்கத்தினரை அழைத்தார். அவர்களும் கதவை தட்டினர். எனினும் கதவு திறக்கப்படவில்லை.
இதனால் அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு சசிகலா தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டு இருந்தார்.
சசிகலாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அரச்சலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து சசிகலா எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்